Sunday 27 May 2018

மிக முக்கியச் செய்தி(Most Urgent News)
**********************
நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது 
**********************
போராட்டம் ஏழாம்  நாளை நோக்கி நகர்கிறது... வரும் 28.05.2018 ஆம் நாளன்று  (திங்கள் கிழமை) தென்னகத்தின் தலைநகரம் வீரம் செறிந்த பூமி  மதுரையில் காலை 10 மணியளவில் தென்மண்டல அளவில் ரயில் மறியல் போராட்டம் நடத்திட மாநில சங்கம் முடிவெடுத்துள்ளது.தோழர் தோழியர்கள்  அனைவரும் கண்ணியத்தோடும் கட்டுப்பாடோடும் நடந்து கொள்ள அறிவுறுத்தப்  படுகிறார்கள்.தமிழ் மாநில தலைவர்  திரு. M.ராஜாங்கம் அவர்கள் தலைமையிலும் மாநில செயலர் (I/C) திரு.M.பாஸ்கரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது.  தென்மண்டல கோட்ட, கிளை நிர்வாகிகள் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப் படுகிறார்கள். அனைத்து தோழர் தோழியர்களும் தத்தமது கோட்ட நிர்வாகிகளிடம் கூடுதல் விபரங்களைக் கேட்டறிந்து கொள்ளவும்.கமிட்டி அறிக்கைக்கு ஒப்புதல்  கிடைக்கும் வரை வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை! 
வீரம் செறிந்த போராட்ட  வாழ்த்துகளுடன்...


M.பாஸ்கரன் 
மாநில செயலாளர்(பொறுப்பு) தென் மண்டல செயலாளர்,மதுரை .
தொடர்புக்கு:
ராஜாங்கம்:9787157078 
பாஸ்கரன்:9943054914
இஸ்மாயில்:9442265195
செல்வன்:9788451803

No comments:

Post a Comment