Thursday 31 May 2018

**********************
 *நீ ஊமையாய் இருக்கும்* *வரை இந்த உலகம் செவிடாய்த்தான் இருக்கும்* 
*********************
*முக்கிய செய்தி* 
*********************
வேலை நிறுத்தப் போராட்டம் இன்றுடன்(01/06/2018) பதினோறாவது நாளை நோக்கி நகர்கிறது.பேச்சு வார்த்தை இன்று மாலை நடைபெறுகிறது.
**********************
அனைத்து GDS தோழர் தோழியர்களுக்கும்  மாநில சங்கத்தின் சார்பில் காலை  வணக்கம்... 
இன்று  காலை 9 மணி முதல்  அந்தந்த  கோட்ட தலைமையிடங்களில் அனைத்து GDS ஊழியர்களையும் ஒன்றினைத்து பெரிய அளவில் தொடர் உண்ணாவிரத போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திடுமாறு மாநில சங்கம் அன்போடு வேண்டுகிறது.மறு அறிவிப்பு வரும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்.அறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கும் வரை வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. 
இன்றைய தினம் (01/06/2018) தலைநகர் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டமும் பேரணியும் JCA அமைப்பினால் நடைபெற உள்ளது. அதனை பிரதிபலிக்கும் முகமாக நாமும் தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துமாறு மாநில சங்கம் அன்போடு வேண்டுகிறது.
வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகளுடன்... 
==================

M. பாஸ்கரன்
மாநில செயலர் (பொறுப்பு) 
தென் மண்டல செயலர்,தமிழ் மாநிலம், சென்னை. 
=================

குறிப்பு: இன்று மாலை அனைத்து நிர்வாகிகளும் த்ததமது கோட்ட அளவில் கோட்ட அதிகாரிகளை சிறை பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
=================
 *மிக்க நன்றி* 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*********************
 *அடுத்தவர் விருப்பத்திற்குத் தான் வாழ வேண்டும் என்றால் செத்துவிடு...* 
         --விவேகானந்தர் 
***********************

No comments:

Post a Comment