Saturday 24 February 2018

தொடர் கறுப்பு சட்டை அணிந்து போராட்டம்


தோழர்களே

    நமது மத்திய சங்க அறிவிப்பின்படி கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை உடனடியாக அமுல் படுத்திடக்கோரி 19.02.2018 முதல் நமது பணியிடங்களில் கறுப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம் தமிழகமெங்கும் இன்றைய தினம் ஐந்தாவது நாளாக வீரம் செறிந்த போராட்டமாக நடை பெற்று வருகிறது. நாளைய தினம் (24.02.2018) நமது போராட்டத்தை சிறப்பான முறையில் நடத்திடவும், வரும் மார்ச் 14 ஆம் தியதிக்குள் நமது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையெனில் 15.03.2018 அன்று டெல்லியில், பிரதமர் இல்லத்தின் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. எனவே தமிழகத்தில் இருந்து பெருவாரியான தோழர்கள் டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்ள தங்கள் பயணத்திற்கான இரயில் முன்பதிவினை உடனடியாக செய்து கொள்ளவும்.

     நமது கோரிக்கை குறித்து பொதுச் செயலர் S S மஹாதேவைய்யா BJP அகில இந்திய தலைவர் அமித்ஷா அவர்களை 21.02.2018 அன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் சந்தித்து பிரச்னையின் தீவிரத்தை எடுத்துரைத்து கோரிக்கை மனு அளித்துள்ளார்கள். BJP தலைவர் அவர்கள் நமது கோரிக்கையை உடனடி கவனிப்பதாக உறுதிமொழி அளித்துள்ளார்.

   பயண ஏற்பாடு செய்துள்ள தோழர்கள் பொறுப்பு செயலர் தோழர் M பாஸ்கரன் அவர்களிடமோ அகில இந்திய தலைவர் தோழர் M இராஜாங்கம் அவர்களிடமோ தங்கள் பயண விபரங்களை தெரிவித்தால் தலைநகரில் மத்திய சங்கம் ஏற்பாடு செய்துள்ள ரவிதாஸ் மந்திர் குருத்துவாரா இல் இருந்து தமிழக தோழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டி மாநில சங்கம் ஏற்பாடு செய்யும்.



M பாஸ்கரன் 
மாநில செயலர் (பொறுப்பு)





















Tuesday 13 February 2018

Sunday 11 February 2018

சென்னை CPMG அலுவலகத்தில் 27.02.2018 அன்று நடைபெற உள்ள நான்கு மாத பேட்டிக்காக பிரச்சனைகள்.



மத்திய சங்க போராட்ட அறிவிப்பு 

அன்பார்ந்த தோழர்களே! தோழியரே!

      ஏழாவது ஊதியக்குழுவின் பணப்பலன்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பின்னரும், இந்திய அஞ்சல் துறையில் கிராமப்புறங்களில் பணியாற்றும் கிராமிய அஞ்சல் ஊழியருக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டி தனது அறிக்கையினை அரசுக்கு 24.11.2016 அன்று அளித்தது. கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமுல் படுத்திட பல்வேறு போராட்ட்டங்களை நடத்திய பின்னரும் அரசும், இலாகாவும் தொடர்ந்து மெத்தன போக்கையே கடைபிடித்து வருகிறது. இன்று, நாளை என நாட்களை கடத்துவதிலேயே குறியாக உள்ளது. நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்த பின்னரும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒருசில விளக்கங்கள் கேட்டு மீண்டும் இலாகாவுக்கு அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஊழியர் நலனில் அக்கரை இல்லாத அரசு மீண்டும் நம்மை ஏமாற்றும் சூழல் உருவாகிவிடுமோ எனும் அச்சம் நமது தோழர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. "செய் அல்லது செத்துமடி" எனும் சொல்லுக்கு ஏற்ப நமது AIGDSU சங்கம் தொடர்ந்து அறிக்கையின் அமுலாக்கத்திற்கான போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

பணியிடங்களில் கறுப்பு பட்டை அணிந்து போராட்டம் 

                        கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை காலம் தாழ்த்திடும் மத்திய அரசின் ஏதேச்சாதிகார போக்கினை கண்டித்து வரும் 19.02.2018 முதல் 24.02.2018 வரை அஞ்சலகங்களில் ஊழியர்கள் பணியின்போது கறுப்பு பட்டை அணிந்து போராடிடவும் வரும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2018) அன்று பிரதமர் இல்லத்தின் முன்பு பெருந்திரள் தர்ணா போராட்டம் நடத்திடவும் நமது மத்திய சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. அதன் அடிப்படையில் போராட்டம் நடத்திட கோட்ட கிளை செயலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்திடவும். மேலும் 15.03.2018 அன்று டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து பெருவாரியான தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும். அதற்கான பயண ஏற்பாட்டினை உடனடியாக தயார் செய்து கொள்ள மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.




M பாஸ்கரன் 
மாநில செயலர்(பொறுப்பு)