Wednesday 30 May 2018

மிக முக்கிய செய்தி
நாள்:30/05/2018(புதன்)
**********************
கோட்ட மற்றும் கிளைச் செயலர்கள் கவனத்திற்கு...
**********************
அனைவருக்கும் வணக்கம் 
நமது மாநிலச் சங்கத்தின் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என மத்திய சங்கம் அறைகூவல் விடுப்பதால் இன்று ஒன்பதாவது நாளாக (30/05/2018) வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. ஆகவே அவரவர் தத்தமது கோட்டங்களில் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தும்  போராட்டம்,கருப்பு பட்டை அணிதல்,அஞ்சலகங்களில் கருப்பு கொடி ஏற்றுதல்,ஆளுநருக்கு மெமோரண்டம் அனுப்புதல், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல் போன்ற தீவிரமான போராட்ங்களை நடத்துமாறு மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது...மத்திய அரசு மற்றும் அஞ்சல் துறையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகத் தீவிரமான போராட்டங்களை நடத்துமாறு அத்துனை கோட்டச் செயலாளர்களும் அறிவுறுத்தப் படுகிறார்கள்
போராட்டம் தீவிரமடையட்டும்...
இன்றில்லையேல் என்றுமில்லை... புறப்படு தோழா போராட்டக் களம் நோக்கி ...வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகளுடன் 


இவண்...
===============
மாநில செயலர் மற்றும் தலைவர்  AIGDSU தமிழ் மாநிலம்,சென்னை.
===============
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

No comments:

Post a Comment