Monday 21 August 2017

தொடரட்டும் வேலை நிறுத்த போராட்டம் 

நமது காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் இன்று வெற்றிகரமாக ஆறாவது நாளை நிறைவு செய்துள்ளது. GDS ஊழியர்களுடைய வாழ்வாதார பிரச்சனைகளுக்கான இப்போராட்டத்தை அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. இலாகா வேலையில் இலக்கினை அடைந்திட GDS ஊழியர்களை கசக்கிப்பிழியும் அதிகார வர்க்கம் GDS ஊழியர்களின் உரிமைக்கான போராட்டத்தை வலுவிழக்க செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவது வெட்கப்பட வைக்கிறது. போராட்ட வீச்சம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் போராட்ட நடவடிக்கைகளை குலைத்திட வதந்திகளும் பரப்பப்பட்டு வருகிறது. எந்தவிதமான பிரச்சனைகள் வந்தாலும் நெஞ்சுரம் மிக்க GDS தோழர்கள் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதை இலாகா உணரும் காலம் நெருங்கி உள்ளது. நமது கோரிக்கைகளை வெல்வது வரை உறுதியுடன் போராடுவோம். இன்றைய தினம் பேசிச்சுவார்த்தை எதுவும் நடைபெறாததால் நாளையும் நமது போராட்டம் தொடரும். எனவே கோட்ட கிளை நிர்வாகிகள் போராட்ட நடவடிக்கைகளை தொய்வில்லாமல் நடத்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலர் 

No comments:

Post a Comment