Wednesday 23 August 2017

கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு 

        ஏழு நாட்கள் வெற்றிகரமாக நடத்திய போராட்டத்தின் மூலம் அரசு நமது கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுத்துள்ளது. போராட்ட பலன்கள் அகில இந்திய சங்க அறிக்கை கிடைத்தபின் வெளியிடப்படும். தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான யூகங்களும் தவறான செய்திகளும் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. நமது சங்கம் எப்போதும் உண்மையான செய்திகளை ஆதாரத்துடன் தான் வெளியிடும். எனவே தவறாக பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனும் செய்தியினை அனைத்து தோழர்களுக்கும் தெரியப்படுத்தவும். மாநில, அகில இந்திய சங்க அதிகாரபூர்வமான இணைய தளங்களில் வரும் செய்தியை மட்டும் சுற்றரிக்கையாக வெளியிட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலர் 

1 comment:

  1. போராட்ட வெற்றியின் விவரங்களை தெரிவிக்கவும்-ரெங்காச்சாரி அஞ்சல் அலுவலர் ஓய்வு இருப்பு எமனேஸ்வரம்

    ReplyDelete