Monday 28 August 2017

கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு 

                ஏழு நாட்கள் நடைபெற்ற வீரம் செறிந்த வேலை நிறுத்த போராட்டத்தின் தொடர்ச்சியாக நமது AIGDSU சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக வரும் September இறுதிக்குள் கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை இலாகா அமலாக்க உள்ளது. போராட்டத்தை விமர்சிக்கும் போட்டி சங்கங்களின் பொய்யான வதந்திகளை புறந்தள்ளி நமது வெற்றியினை போராடாத தோழர்களுக்கும் சேர்ந்தே பகிர்ந்தளிப்போம்.

                         சங்க அங்கீகார உறுப்பினர் படிவம் சமர்ப்பித்திட 05.09.2017 இறுதி நாளாகும். எனவே கோட்ட கிளை செயலர்கள் விரைந்து செயல்பட்டு அனைத்து GDS தோழர்களையும் நமது AIGDS சங்கத்தில் உறுப்பினராக்கி தமிழகத்தில் 100% உறுப்பினர் சேர்க்கையை உறுதி செய்திட வேண்டுவதோடு, இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக கோட்ட கண்காணிப்பாளர்களிடம் உறுப்பினர் படிவத்தை சமர்ப்பித்து இலாகாவில் பெரும் உறுப்பினர்  படிவத்திக்கான நகலை மாநில சங்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்.


A இஸ்மாயில் 
மாநில செயலர்.

5 comments: