Monday 30 April 2018

திருவண்ணாமலை கோட்ட மாநாடு 
















மாநில சங்க செயற்குழு கூட்டம் 13-05-2018 அன்று சேலத்தில் நடைபெற உள்ளது. அதற்கான Notification.


தோழர் NCA அவர்களின் நினைவஞ்சலி

தொழிலாளர் உரிமையை பெற வேண்டிட,அதிகார வர்க்கத்தின் ஆணவத்தை அடக்கிட,தொழிலாளர் நலன் காத்திட தொழிற்சங்க தலைவனின் செயல்பாடுகள் எவ்விதம் அமைய வேண்டும் என உணர்த்திய தன்னிகரில்லா தலைவன் , நமது நினைவை விட்டு மறையாத அண்ணன் பாலு அவர்களை உருவாக்கிய தலைவன் தொழிலாளர்களுக்காகவே வாழ்ந்து தொழிலாளர் தினத்திலேயே இவ்வுலகை விட்டு மறைந்த அன்பு தலைவன் N C A அவர்களை கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் என்றென்றும் நினைவு கூர்ந்து தனது அஞ்சலியை செலுத்துகிறது. அவர் விட்டு சென்ற பணியை தொடர தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் இந்நாளில் சபதமேற்கிறது.

மே தின வாழ்த்துக்கள்

 தொழிற்சங்க இலக்கணம் -நூற்றாண்டை கடந்தும் வாழும் வலம் வரும் கவிதை 

தொழிலாளர் இயக்கம்
பத்தாயிரம் முறை விழும்;
எழும்; வடுபடும்; மறுபடியும்; எழும்!
அதன் குரல்வளை இறுக்கப்படும்,
உணர்வற்றுப் போகும் வரை
தொண்டை அடைக்கப்படும்;

                  நீதிமன்றம் கேள்விக்கணை தொடுக்கும்;
                  குண்டர்களால் வசைபாடப்படும்;
                  பத்திரிக்கைகளால் வசைப்பாடப்படும்;
                  பொதுமக்களின் புருவ நெரிப்பும் கூட போர் தொடுக்கும்;
                  அரசியல்வாதிகளால் ஏய்க்கப்படும்;

ஓடுகாலிகளால் மறுப்புரைகள் கூறப்படும்;
கூதாடிகளால் பலிகொடுக்கப்படும்;
உளவாளிகளின் ஒற்றறியும் நோயால் பீடிக்கப்படும்;
கோழைகளால் நடுவீதியில் விடப்படும்;
துரோகிகளால் வஞ்சிக்கப்படும்;
தலைவர்களால் கூட விற்று விடப்படும்!

                  ஓ!
                  இவ்வளவு சோதனைகள் இருந்தாலும்
                  இந்த வையகம்,
                  இதுவரை கண்டிராத
                  உன்னத சக்தி வாய்ந்தது -
                  உழைக்கும் மக்களின் இயக்கம் ஒன்றுதான்!

ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டிருக்கும்
பாட்டாளிகளை விடுதலை செய்வதே
வரலாற்றுக் கடமையாகும்;
இதன் வெற்றி சர்வ நிச்சயமே!



Tuesday 24 April 2018

GDS ஊழியர்களுக்கான DA வெளியிடப்பட்டுள்ளது .


Monday 23 April 2018

22.04.2018 அன்று நடைபெற்ற ஆரணி கிளை மாநாடு சிறப்பாக நடைபெற்றது.தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நமது மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்..



M.பாஸ்கரன்,
மாநில செயலர் (பொறுப்பு),
தமிழ்நாடு.💐