Wednesday 2 August 2017

வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்வீர்

கோட்ட கிளை செயலர் கவனத்திற்கு,

            கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமுல் படுத்திடக்கோரி பலகட்ட போராட்டங்கள் நடத்திய பின்னரும் அரசு நமது கோரிக்கைகளின் நியாயத்தை புறக்கணித்தே வருகிறது. ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் மத்திய அரசு ஊழியருக்கு அமலாக்கம் செய்து 19 மாதங்கள் கடந்த பின்னரும் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கான கமிட்டியின் பரிந்துரைகள் இன்றுவரை அமுல் படுத்தாததை கண்டித்தும், சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமுல் படுத்திடக்கோரியும் நமது மத்திய சங்கம் 16.08.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பினை இலாகாவுக்கு வழங்கி உள்ளது.

                        எனவே கோட்ட கிளை செயலர்கள் ஒவ்வொரு கோட்ட  மட்டத்திலும் பகுதி கூட்டங்கள் நடத்தி போராட்ட தயாரிப்புகளை விரைவு படுத்திடவும், தமிழகத்தில் போராட்டத்தை 100% வெற்றியடைய செய்யவும் மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

                    சங்க அங்கீகார உறுப்பினர் சரிபார்ப்புக்காக உறுப்பினர் படிவங்களை விரைந்து பெற்று 05.09.2017 க்குள் அந்தந்த கோட்ட கண்காணிப்பாளர்களிடம் கொடுக்கவும். மாற்று சங்கங்கள் நமது உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி இரட்டை படிவம் மூலம் உறுப்பினர் அந்தஸ்தை இழப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. எனவே கோட்ட கிளை நிர்வாகிகள் விழிப்புடன் செயல்பட்டு நமது தோழர்களிடம் AIGDSU சங்கத்தை தவிர யாருக்கும் உறுப்பினர் படிவம் வழங்கிட வேண்டாம் எனும் விபரத்தையும் தெரிவிக்கவும்.



A இஸ்மாயில் 
மாநில செயலர்  

No comments:

Post a Comment