Thursday 12 January 2017

பொய்த்து போன பருவமழை 
மனைகளாகிவிட்ட விளைநிலம் 
அற்றுப்போன அறுவடை 
போராடி பெறுகின்ற பொங்கல் விடுப்பு 
உழைக்கும் வர்க்கத்தின் உதிரத்தில் வளம் பெறும் 
பன்னாட்டு கம்பெனிகளின் பிடியில் ஆளுமையின் தலைமை 
சிறுக சிறுக சேமித்ததையும், தினக்கூலியையும் 
பெற்றிட நாள் முழுவதும் வங்கி வாசலில் 
யாசகம் கேட்கும் இழி நிலை 
வறுமையில் வாடும் விவசாயின் தற்கொலை 
பாரம்பரிய தமிழின விளையாட்டாம் ஜல்லிக்கட்டை 
காத்திட வேண்டி அணிதிரளும் இளைஞர்படை 
காவலரின் அடக்குமுறையை எதிர்கொள்ளும் மாணவர்படை 
இத்தனையும் இல்லாமல், வரும் காலம் 
அறுவடை திருநாளாகி அனைவரின் வாழ்விலும் 
சுபிட்சம் பெற்றிட இறைவனை வேண்டி 
தமிழர் திருநாளாம் - பொங்கல் வாழ்த்துக்களை 
அனைவருக்கும் அன்புடன் பகிர்ந்து கொள்வோம்.

இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள் 




A இஸ்மாயில் 
மாநில செயலர் 

No comments:

Post a Comment