Monday 19 December 2016

கோட்ட கிளை செயலர் கவனத்திற்கு

         கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கை 28.11.2016 அன்று இலாகா அமைச்சரிடம் அளிக்கப்பட்டும்  இன்று வரை தொழிற்சங்கங்களுக்கு அந்த நகலை தராமலும், அறிக்கையை அமுல் படுத்திட நடவடிக்கை எடுத்திடாததை கண்டித்தும் வரும் 29.12.2016 அன்று மத்திய சங்க அறைகூவல் படி மாநில CPMG அலுவலகம் - சென்னையில் ஒரு நாள் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.எனவே கோட்ட/கிளை சங்கங்களில் இருந்து பெருவாரியான தோழர்கள் கலந்து கொண்டு போராட்டத்தினை வெற்றியடைய செய்திட கோட்ட கிளை செயலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலர் 

No comments:

Post a Comment