Monday 5 December 2016

*முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி*




ஆண்களின் பேராதிக்கமே நிறைந்துள்ள அரசியல் தளத்தில் ஒரு பெண் உயர்த்த நிலையை எட்டுவதும் அதை தக்க வைத்துக்கொள்ள போராடுவதும் மிகமிக சிரமம். பொது வாழ்வில் பணியாற்றும்  பெண்களை தூற்றுவதும் அவர்களது தார்மீக பலத்தை முடக்குவதும்  ஆண் வர்க்க சமூகத்தின் கைவந்த கலை. அதை முறியடிக்கவே அவர் கட்சியை் கட்டுக்கோப்புடன் நடத்தி வந்தார் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் தனது செயல்பாடுகளால் தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார்.
அவரது மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.


                                                                                        மாநில செயலர் 

No comments:

Post a Comment