Wednesday 14 December 2016

கோட்ட கிளை செயலர் கவனத்திற்கு

 GDS ஊழியருக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கை 24.11.2016 அன்று இலாகாவுக்கு அளிக்கப்பட்டும், இலாகா 28.11.2016 அன்று துறை அமைச்சருக்கு அளிக்கப்பட்டும் இன்றுவரை அறிக்கையின் நகல் தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்படவில்லை. அமுல் படுத்துவதற்கான  நடவடிக்கையும் எடுத்திட வில்லை. இதுகுறித்து 14.12.2016 அன்று இலாகா அமைச்சரிடம் நமது பொதுச்செயலர் தோழர் S S மஹாதேவய்யா அவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் GDS ஊழியருக்கு சாதகமான நிலை எட்டப்படாததால் மத்திய சங்கம் 22.12.2016 அன்று கோட்ட மட்டத்தில் தர்ணா/ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது. எனவே கோட்ட செயலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து போராட்டத்தை வெற்றிகரமாக்கிட மாநில சங்கம் வேண்டுகிறது.

மாநில செயலர் 
A இஸ்மாயில் 

No comments:

Post a Comment