Thursday 1 September 2016

CWC Meeting at Sulur on 28.08.2016

      மாநில சங்க செயற்குழு கூட்டம் 28.06.2016 அன்று சூலூர் அரிமா அரங்கத்தில் வைத்து மாநில தலைவர் தோழர் M இராஜாங்கம் அவர்கள் தலைமையில் நடந்தது.

            பத்து அம்ச ஆய்படு பொருள்கள் பற்றிய விவாதத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்களும், கோட்ட கிளை செயலர்களும் தல மட்ட பிரச்சனைகளை பற்றி விரிவான விவாதங்களை எடுத்துரைத்தனர்.

         கோட்ட மாநாட்டை உரிய சமயத்தில் நடத்தாத பொள்ளாச்சி கோட்ட சங்க செயலர் மீதும், மாநில சங்க அறிவுறுத்தலுக்கு கட்டுப்படாத தாம்பரம் கோட்ட சங்க செயலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பொள்ளாச்சி, தாம்பரம் கோட்டங்களுக்கு அட்ஹாக் கமிட்டி அமைக்கப்பட்டது.

       மாநில சங்க ஆலோசகர் தோழர் R ஜான் பிரிட்டோ, NCA பேரவை தலைவர் தோழர் C அமிர்தலிங்கம் NCA பேரவை முன்னாள் செயலர் தோழர் முத்துசுவாமி சங்க சட்ட ஆலோசகர் தோழர் R வாசுதேவன், தோழர் T கந்தசுவாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

       செயற்குழு கூட்ட ஏற்பாடுகளை மிக சிறப்பான முறையில் செய்த திருப்பூர் கோட்ட சங்க பொறுப்பாளர்களுக்கும், தோழர் செய்யது நிஜாம் அவர்களுக்கும் மாநில சங்கத்தின் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.






No comments:

Post a Comment