Saturday 24 September 2016

கோட்ட/கிளை செயலர்கள் கவனத்திற்கு

 மத்திய அரசு ஊழியர்களுக்கு 2014-2015 ம் ஆண்டிற்கு உயர்த்தி வழங்கப்பட்ட போனஸ் நிலுவை தொகையினை GDS ஊழியர்க்கும் வழங்கிட மறுக்கும் அஞ்சல் இலாகாவின் நடவடிக்கையை கண்டித்து அகில இந்திய சங்கம் மூன்று கட்ட போராட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக வரும் 05.10.2016 அன்று கோட்ட  அலுவலகங்களின் முன் தர்ணா போராட்டமும் இரண்டாம் கட்டமாக 14.10.2016 அன்று டில்லியில் DG அலுவலகம் முன்பு தர்ணா போராட்டமும் மூன்றாவது கட்டமாக 18.10.2016 மற்றும் 19.10.2016 இரு நாட்கள் வேலை நிறுத்த போராட்டமும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே கோட்ட கிளை செயலர்கள் விரைந்து செயல்பட்டு வேலை நிறுத்த போராட்டம் முழு அளவில் நடைபெற பகுதி வாரியான விளக்க கூட்டங்கள் நடத்தி அனைத்து GDS ஊழியர்களையும் போராட்டத்தில் கலந்து கொள்ள ஆவண செய்யுமாறு மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

                                                                                                                A இஸ்மாயில் 
                                                                                                               மாநில செயலர் 

No comments:

Post a Comment