Wednesday 7 March 2018

மாபெரும் ஆர்ப்பாட்ட போராட்டத்தை வெற்றிபெற செய்வீர்

 கோட்ட கிளை செயலர்களுக்கு,

           தமிழகத்தின் பல்வேறு கோட்டங்களில் கோட்ட, உபகோட்ட அதிகாரிகள் GDS தோழர்களுக்கு புதிதாக SB, RD, 26A, RPLI கணக்குகள் ஆரம்பித்திட Target கொடுத்து மிரட்டி வருகிறார்கள். அப்பாவி GDS தோழர்கள் தங்களது சொந்த பணத்தில் கணக்குகளை தொடங்கிட நிர்பந்தித்து வருவதாகவும், அதிகாரிகள் மட்டத்தில் கணக்கு எண்ணிக்கையை காட்டிட ரூபாய் 10 மற்றும் ரூபாய் 25 க்கு RD கணக்குகள் தொடங்கிடவும், குறைந்த தொகையில் RPLI பாலிசிகள் பிடித்திடவும் GDS தோழர்களிடம் கெடுபிடி செய்து வருகிறார்கள். இத்தகைய போக்கு DG உத்தரவுக்கு எதிரானது என்பதை நாம் CPMG அவர்களுக்கு தெரிவித்த பின்னும் கோட்ட மட்டத்தில் இந்நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே Target கொடுத்து Torture செய்யும் போக்கிக்கினை உடனடி நிறுத்திடவும், கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையை உடனடி அமுல் படுத்திட கோரியும் 09.03.2018 அன்று மாநில சங்கம் அறிவித்துள்ள ஆர்ப்பாட்ட போராட்டங்களை கோட்ட தலைமையிடங்களில் வீரம் செறிந்த போராட்டமாக நடத்திட கோட்ட கிளை செயலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

M பாஸ்கரன் 
மாநில செயலர்(பொறுப்பு)

No comments:

Post a Comment