Sunday 28 January 2018

வருந்துகிறோம் 



நெல்லை AIGDSU சங்கத்தின் கோட்ட செயலர் -தோழர் S .காலப்பெருமாள் GDSMD விஜயநாராயணம் நாவல்பேஸ் அவர்கள் நேற்றிரவு(28.01.2018) நாங்குநேரி -திசையன்விளை சாலை ஏமென்குளம் அருகில் சாலைவிபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார்கள் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதிச்சடங்கு இன்று 29.012018 நண்பகல் நடைபெறும் .

  தோழர் காலப்பெருமாள் அவர்கள் AIGDSU சங்கத்தின் நெல்லை கோட்ட செயலர் -மாநில உதவி செயலர் என்று பல்வேறு பொறுப்புகளில் மிளிர்ந்தவர் -மிடுக்கான மேடைப்பேச்சும் எடுப்பான கோஷமும்அவரை மாநிலம் முழுவதும் விரைவிலே அடையாளம் காட்டியது. அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் உண்மை பற்றாளனாய் திகழ்ந்தவர். அன்னாரின் இறுதிச்சடங்கு தொடர்பான போஸ்ட்மார்ட்டம் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் வைத்து நடைபெறுகிறது இறுதிச்சடங்கு அவரது சொந்த கிராமமான விஜயநாராயணபுரத்தில் வைத்து இன்று நண்பகல் வாக்கில் நடைபெறுகிறது. அவரது இழப்பு தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். 

தோழரை இழந்துவிடும் அவர்தம் குடும்பத்திற்கு தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.




1 comment:

  1. Rural postal employes 31.01.18 news Hindi puplish translate in english

    ReplyDelete