கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையினை உடனடியாக அமுல்படுத்திடக்கோரி பாரதிய ஜனதா தேசிய தலைவர் திரு.H ராஜா அவர்களை காரைக்குடியில் அவருடைய இல்லத்தில் இன்று காலை (28.11.2017) மாநில சங்க தலைமை ஆலோசகர் தோழர் R ஜான் பிரிட்டோ, தென் மண்டல செயலாளர் தோழர் பாஸ்கரன், காரைக்குடி கோட்ட செயலர் தோழர் M ரவி ஆறுமுகம், தலைவர் தோழர் S சிவகுமார், பொருளாளர் தோழர் S S முருகன், முன்னாள் செயலர் S ஆறுமுகம், முன்னாள் தலைவர் S பூமிநாதன் மூத்த தோழர் K R ஆதிமுத்து ஆகியோர் சந்தித்து மாநில சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு அளித்து GDS ஊழியர் பிரச்சனைகளை தெளிவாக எடுத்துரைத்தனர். சுமார் ஒருமணிநேரம் கடந்த சந்திப்பின் விளைவாக திரு H ராஜா அவர்களும் தான் உடனடியாக நிதி அமைச்சரை சந்தித்து GDS பிரச்சனைகளை விரிவாக எடுத்துரைத்து கமிட்டி அறிக்கையின் அமலாக்கத்திற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மாநில சங்கம் கமிட்டி அறிக்கையின் அமுலாக்கத்திற்கான தொடர் நடவடிக்கைகளை விரைவு படுத்தி உள்ளது.
A இஸ்மாயில்
மாநில செயலர்.















