Friday 7 July 2017

இரங்கல் செய்தி 

         தொழிற் சங்க மாமேதை முன்னால் ஒன்றுபட்ட சம்மேளன (NFPTE) பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய மாபெரும் தலைவர் தோழர் ஞானையா (கோயம்புத்தூர்) அவர்கள் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மருத்துவமனையில் வைத்து இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்வதோடு அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

       தொழிற் சங்க வரலாற்றில் தொழிலாளர் நலனுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவர்களின் வரிசையில் தோழர் ஞானையா அவர்களின் அர்ப்பணிப்பு அதனால் அவர் அடைந்த துயரங்கள், இழப்புகள் இன்றைய தலைமுறைக்கு ஒரு வரலாற்று பாடமாகும். அன்னாரின் இழப்பு தொழிற்சங்கத்திற்கு ஈடு செய்ய முடியாதது. அவருடைய ஆன்மா சாந்தி அடைத்திட அனைவரும் பிராத்திப்போம்.

No comments:

Post a Comment