Monday 3 July 2017

போராட்ட அறிவிப்பு

கோட்ட/கிளை செயலர் கவனத்திற்கு 

           கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்திட கோரி மத்திய சங்கம் பல்வேறு அரசியல் தலைவர்களிடமும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை மனு அளித்தும், இலாகா தலைமையிடம் கோரிக்கை வைத்த பின்னும் அறிக்கையின் அமலாக்கத்தை இலாகா தாமதப்படுத்தி வருகிறது. 25.04.2017 முதல் நடைபெறுவதாக இருந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இலாகாவின் வேண்டுகோளுக்கு இணங்க ஒத்தி வைக்கப்பட்ட பின்னரும் நமது கோரிக்கைகளில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் கமிட்டியின் அறிக்கை இன்று வரை நிதி அமைச்சருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெற பெற விரும்பவில்லை. எனவே மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்திட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதால், மத்திய சங்கம் இலாகாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் 15.08.2017 க்குள் கமிட்டியின் அறிக்கை அமலாக்கப்பட வில்லையெனில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வோம், என்றும் அதற்கு முன்னர் இரண்டு கட்டமாக 12.07.2017 அன்று கோட்ட தலைமையிடங்களில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டமும் 20.07.2017 அன்று மாநில தலைமையிடங்களில் உண்ணாவிரத போராட்டமும் நடத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனவே கோட்ட/கிளை செயலர்கள் விரைந்து செயல்பட்டு போராட்டத்திற்கான தயாரிப்புகளை செய்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலர் 



3 comments:

  1. Dears
    Tiruppur North division daily torucher and daily depression all postal gds employee affected last year10gdssuside4membergdssdeath.nobody care them please solving probelm

    ReplyDelete
  2. Dears
    Tiruppur North division RPLI account daily torucher and daily depression all postal gds employee affected last year10gdssuside4membergdssdeath.nobody care them please solving probelm

    ReplyDelete
  3. Dears
    Tiruppur North division daily torucher and daily depression all postal gds employee affected last year10gdssuside4membergdssdeath.nobody care them please solving probelm

    ReplyDelete