Sunday 16 July 2017

குடந்தை கோட்ட 10வது கோட்ட மாநாடு

      கும்பகோணம் கோட்ட 10வது கோட்ட மாநாடு கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் வைத்து கோட்டத்தலைவர் S கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் 16.07.2017 அன்று நடைபெற்றது. கோட்ட பொருளாளர் தோழர் C சேகர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். சங்க கொடியினை மாநில செயலர் A இஸ்மாயில் அவர்கள் ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். செயலாளர் R ஸ்வாமிநாதன் அவர்கள் ஈராண்டறிக்கையினை சமர்ப்பித்தார்.பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் கீழ்காணும் நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த வாழ்த்தரங்கத்தில் கோட்ட கண்காணிப்பாளர் L துரைசாமி, உதவி கண்காணிப்பாளர் S அருள்தாஸ் முன்னாள் P3 கோட்ட செயலர் D கோவிந்தராஜன், முன்னாள் P4 கோட்ட செயலர்கள் A நாகராஜன், U பழனிவேலு ஆகியோர் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தினர். மாநாட்டில் பெருந்திரளான தோழர்களும் தோழியரும் கலந்து சிறப்பித்தனர்.

புதிய நிர்வாகிகள் 

தலைவர்          :      தோழர் S கிருஷ்ணமூர்த்தி
                                      GDS BPM, பழையக்கூடலூர் BO 


செயலர்           :       தோழர் R ஸ்வாமிநாதன்
                                      GDS BPM, கங்காதரப்புரம்.


பொருளாளர்:        C சேகர்
                                      GDS BPM, கோவிந்தபுரம் BO


மாநாட்டு புகைப்படங்கள் 



 











1 comment: