Tuesday 7 November 2017

கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு 

கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமுல் படுத்துவது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட தலைமையிடங்களில் 10.11.2017 அன்று மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்திட மாநில சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. நிதி அமைச்சகத்துக்கு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ள அறிக்கையின் நகல் உடனடியாக ஒப்புதலுடன் இலாகாவுக்கு அனுப்பப்பட வேண்டும். நமது ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலமே கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். எனவே கோட்ட  கிளை செயலர்கள் விரைந்து செயல்பட்டு மாலை நேர போராட்டத்தை 100 சதவீதம் வெற்றி பெற செய்திட வேண்டும் என மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.



A இஸ்மாயில் 
                          மாநில செயலர்.

No comments:

Post a Comment