Thursday 23 March 2017

9வது மாநில மாநாடு

        9வது தமிழ் மாநில மாநாடு விருதாச்சலம் கோட்டம் பெண்ணாடத்தில் வைத்து 18.03.2017, 19.03.2017 இரு நாட்கள் மாநில தலைவர் தோழர் M இராஜாங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

      முதல் நிகழ்வாக தேசிய கோடியை தொழிலதிபர் திரு R ஞான கணேஷ் அவர்களும், சங்க கோடியை மாநில செயலர் தோழர் A இஸ்மாயில் அவர்களும் விண்ணதிரும் முழக்கங்களுடன் ஏற்றி வைத்தனர். மாநாட்டினை கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அருள்மொழித்தேவன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வரவேற்பு குழு செயலர் தோழர் M இராமகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தலைவர் உரைக்கு பின்னர் மாநில செயலர் கடந்த ஈராண்டு சங்க செயல்பாடுகளையும் நமது தொடர் போராட்டங்களையும் பற்றி விளக்கினார். தொடர்ந்து நடந்த பொருளாய்வரங்கத்தில் 47 கோட்ட செயலர்கள் தங்கள் கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்தனர்.
பொது செயலர் தோழர் S S மஹாதேவய்யா அவர்கள் நமது அமைப்புநிலை முதல் கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையின் அமலாக்கத்திற்கு நாம் எடுத்திட வேண்டிய நடவடிக்கைகள் வரை விரிவாக எடுத்துரைத்தார். 28.03.2017 அன்று கோட்ட மட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திடவும், 06.04.2017 இல் டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி நடைபெறும் பேரணியில் தமிழகத்தில் இருந்து பெருவாரியான தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

    பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில சங்க தலைமை ஆலோசகர் தோழர் R ஜான் பிரிட்டோ, NCA பேரவை தலைவர் தோழர் C அமிர்தலிங்கம், செயலர் தோழர் S K ஜேக்கப் ராஜ், முன்னாள் செயலர் தோழர் S முத்துஸ்வாமி, சங்க சட்ட ஆலோசகர்கள் தோழர் R வாசுதேவன், தோழர் T கந்தசுவாமி, முன்னாள் P3 மாநில செயலர் தோழர் V பார்த்திபன், P3 முன்னாள் அகில இந்திய துணை பொதுச்செயலாளர் தோழர் K பன்னீர் செல்வம், தோழர் சின்னி கிருஷ்ணன், முன்னாள் மாநில பொருளாளர் தோழர் R ஜெகநாதன், விருத்தாச்சலம் கோட்ட கண்காணிப்பாளர் திரு.அர்பின் பாண்டா, திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் V கணேசன், விருத்தாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் V T கலைச்செல்வன் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்.

    புதிய நிர்வாகிகள் தேர்வு ஏகமனதாக நடைபெற்றது.

தலைவர்:           தோழர் M இராஜாங்கம்
                                 GDS BPM,குமணன்தொழு BO
                                 a/w கடைமலைக்குண்டு, தேனீ கோட்டம்.

செயலர்:           தோழர் A இஸ்மாயில்
                               GDS BPM,தெற்கு சூரங்குடி BO
                                a/w ஈத்தாமொழி, கன்னியாகுமரி கோட்டம்.

பொருளாளர்: தோழர் R சுவாமிநாதன்
                                 GDS BPM,கங்காதரபுரம் BO
                                 a/w ஸ்வாமி மலை, கும்பகோணம் கோட்டம்.

        மாநில மகளிர் அணி செயலராக தோழியர் K விஜயா, சேலம் மேற்கு கோட்டம் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள்.

           விழா ஏற்பாடுகளை மிக சிறப்பான விருந்தோம்பலுடன் ஏற்பாடு செய்த வரவேற்புக்குழு தலைவர் தோழர் C இராமஸ்வாமி, செயலர் தோழர் M இராமகிருஷ்ணன், பொருளாளர் D விஷ்ணு விஜயன் ஆகியோருக்கும் அவர்களுடன் இனைந்து ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தோழர்களுக்கும் மாநில சங்கம் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலர்.




































No comments:

Post a Comment