Thursday 5 July 2018

*********************
 **அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்(AIGDSU)தமிழ் மாநிலம் சென்னை ** 
*************************
 **நாள்: 03/07/2018* *
 **மீண்டும் ஒரு வேலை நிறுத்தப் போராட்டம்* * 📢📢📢
************************
 
 என் இனிய GDS தோழர், தோழியர்கள் மற்றும் கோட்டம் மற்றும் கிளை செயலர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
உத்தரகாண்டில் நடந்த CWC முடிவின் படி மீண்டும் ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த மத்திய சங்கம் முடிவு எடுத்துள்ளது ஒரிரு வாரங்களில் இலாகாவிற்கு நோட்டீஸ் சமர்ப்பிக்கப்பட்டு ஆகஸ்டு முதல் வாரத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் துவங்க உள்ளது போர்ப்படை தளபதிகளான கோட்டம்  மற்றும் கிளை செயலர்கள் எந்த நேரமும் தங்கள் படைகளுடன் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப் படுகிறார்கள். மத்திய அரசுக்கும் அஞ்சல் துறை அதிகாரிகட்கும் தகுந்த பாடம் புகட்டும் வரை இனி வரும் போராட்டம் ஓயாது ...

**************************
ஒன்று படுவோம் போராடுவோம் வெற்றி பெறுவோம்...
வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகளுடன்...
என்றும் தொழிற்சங்க பணியில்...
==================
 *A.இஸ்மாயில்* 
 *மாநில செயலர்* 
AIGDSU 
*தமிழ் மாநிலம்,* *சென்னை* .
**********************
 *நெஞ்சுபொருக்குதில்லையே இந்த நிலை கெட்ட மத்திய அரசையும், அஞ்சல் துறை அதிகாரிகளையும் நினைக்கும் பொழுது*
**************************
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை 

நன்றி !!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

No comments:

Post a Comment