Saturday 19 August 2017

தொடரட்டும் - தொடர் வேலை நிறுத்த போராட்டம் 

நமது AIGDSU சங்கத்தின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் வெற்றிகரமான நான்காம் நாளை தாண்டி இன்று ஐந்தாம் நாளாக (20.08.2017) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பொதுச்செயலாளர் S S மஹாதேவய்யா, துணைப்பொதுச்செயலர் B V ராவ், பொருளாளர் லக்விந்தர் பால்சிங் ஆகியோர் இலாகா member(P) திருமிகு உஷா சந்திரசேகர் அவர்களுடன் நடத்திய பேசிச்சுவார்த்தையை தொடர்ந்து இலாகா அமைச்சர் திரு. மனோஜ் சின்கா அவர்களையும் சந்தித்துள்ளார்கள். நம்முடைய நியாயமான கோரிக்கைகளை அழுத்தமாக எடுத்துரைத்துள்ளார்கள். வெற்றி கிட்டும் வரை போராட்டம் என்னும் இலக்குடன் நமது போராட்ட வீச்சத்தினை இன்னும் அதிகப்படுத்தி ஆறாம் நாள் (21.08.2017 திங்கள்) நாம் போராட்டத்தில் 100% நம் தோழர்களை போராட்டக்களத்தில் அணி வகுத்திடுவோம்.

05.09.2017 அன்று உறுப்பினர் படிவம் இலாகாவில் அளித்திட இறுதி நாள் ஆகும். எனவே கோட்ட கிளை நிர்வாகிகள் சங்க அங்கீகார விதிக்கான உறுப்பினர் படிவங்களை விரைவாக கோட்ட கண்காணிப்பாளரிடம் வழங்கி அதற்கான அத்தாட்சி கடிதம் பெற்று அதன் நகலினை மாநில சங்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.

போராட்ட வாழ்த்துக்கள் 

A இஸ்மாயில் 
மாநில செயலர்  

No comments:

Post a Comment